இவ்வாண்டு River Hongbao நிகழ்ச்சி - ஒரு மில்லியன் பேர் திரள்வர் என்ற எதிர்பார்ப்பு
சீனப் புத்தாண்டையொட்டி நடைபெறும் River Hongbao நிகழ்ச்சியில் இவ்வாண்டு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீனப் புத்தாண்டையொட்டி நடைபெறும் River Hongbao நிகழ்ச்சியில் இவ்வாண்டு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சி, இம்மாதம் 23ஆம் தேதியிலிருந்து அடுத்த மாதம் முதல் தேதி வரை நடைபெறும்.
இளையோருக்கும், பெரியோருக்கும் பல்வேறு விதமான நடவடிக்கைகளுக்கும், கண்காட்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரத்துக்கு சிவப்பு அன்பளிப்பு உறைகள் வழங்கப்படும். Hongbao எனப்படும் சிவப்பு அன்பளிப்பு உறையின் வரலாறு, முக்கியத்துவம் ஆகியவற்றை எடுத்துரைக்கும் கண்காட்சியும் இடம்பெறும்.
சீன நாள்காட்டியில் இடம்பெறும் விலங்குகள் பற்றிய மிகை மெய்நிகர் விளையாட்டுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த ஆண்டு Sun Yat Sen Nanyang நினைவு மண்டபத்துடன் இணைந்து River Hongbao நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த 2 ஆண்டுகளுக்கும் அவ்வாறு கூட்டாக ஏற்பாடு செய்வதன் தொடர்பில் இன்று இணக்கக் குறிப்பு கையெழுத்தானது.
சிங்கப்பூரிலிருக்கும் சீனக் குல மரபுச் சங்கங்களின் சம்மேளனமும், தேசிய மரபுடைமைக் கழகமும் அதில் கையொப்பமிட்டன.