கண்டோன்மெண்ட் ரோடு விபத்து - சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிய ஓட்டுநர் கைது
கண்டோன்மெண்ட் ரோட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விபத்தில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் இரண்டாவது மோட்டார்சைக்கிளோட்டி கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் 44 வயதுப் பெண். சம்பவத்தில் 69 வயது மூதாட்டி மாண்டார்.
கண்டோன்மெண்ட் ரோட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விபத்தில் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் இரண்டாவது மோட்டார்சைக்கிளோட்டி கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் 44 வயதுப் பெண். சம்பவத்தில் 69 வயது மூதாட்டி மாண்டார்.
25வயது ஆடவர் ஒருவர் இதற்குமுன் ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியதற்காகக் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காவல்துறையினர் வரும் முன்னரே அந்தப் பெண் தப்பிச் சென்றுவிட்டதாகவும் இம்மாதம் 10ஆம் தேதியன்று பிடிபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.