Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சாலை விபத்துகளில் மாண்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சாலை விபத்துகளில் மாண்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.

வாசிப்புநேரம் -
சாலை விபத்துகளில் மாண்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

படம்: LTA

சாலை விபத்துகளில் மாண்டோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.

2017ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 121 ஆக இருந்தது. சென்ற ஆண்டு அது 124க்கு உயர்ந்தது.

சாலை விபத்தில் மாண்ட மோட்டார் சைக்கிளோட்டிகளின் எண்ணிக்கை 45 விழுக்காடு அதிகரித்துள்ளது.

சென்றாண்டு சாலைவிபத்துகளில் மாண்டோரில் கிட்டத்தட்ட பாதிக்கும் அதிகமானோர் மோட்டார் சைக்கிளோட்டிகளும் அவர்களின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தோரும்.

சாலை விபத்தில் சம்பந்தப்பட்டு மாண்ட பாதசாரிகளில் அதிகமானோர் முதியோர்.

அவர்கள் தொடர்ந்து போக்குவரத்து விளக்குகளைக் கண்டுகொள்ளாமல் சாலையைக் கடப்பது கவலையளிப்பதாக காவல்துறை தெரிவித்தது.

அவர்கள் சாலையைக் கடக்க முற்படும்போது வாகனமோட்டிகள் பார்த்து கவனமாகச் செல்லுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்