Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

ஒலி 96.8-இன் சத்தத்தைச் சொல்லு ரொக்கத்தை அள்ளு...10,000 வெள்ளி ரொக்கத்தைத் தட்டிச்சென்றவர்!

ஒலி 96.8இல் இடம்பெற்ற சத்தத்தைச் சொல்லு ரொக்கத்தை அள்ளு போட்டியின் இறுதிச்சுற்றில், திரு. குலாம் காதர் வெற்றிபெற்றுள்ளார்.

வாசிப்புநேரம் -

ஒலி 96.8இல் இடம்பெற்ற சத்தத்தைச் சொல்லு ரொக்கத்தை அள்ளு போட்டியின் இறுதிச்சுற்றில், திரு. குலாம் காதர் வெற்றிபெற்றுள்ளார்.

அவருக்கு 10,000 வெள்ளி ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்கிய போட்டியில், பங்கேற்பவர் மறைச்சொல்லைச் சரியாகக் கூறி, ஒலியேற்றப்பட்ட சத்தத்தைச் சரியாகக் கண்டுபிடித்துச் சொல்லவேண்டும்.

மொத்தம் 8 போட்டியாளர்கள் சரியான பதிலைச் சொல்லி,
மாபெரும் இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றனர்.

போட்டியில் வெற்றிபெற்றது குறித்து தாமும் தம்முடைய குடும்பமும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகத் திரு. குலாம் காதர் தெரிவித்தார்.

(படம்: திரு. குலாம் காதர்)

"என்னுடைய குடும்பத்தாருக்கும் எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்களுடைய கூட்டு முயற்சியால் வெற்றிபெற முடிந்தது. சத்தங்களை அடையாளம் கண்டோம்" என்று அவர் சொன்னார்.

மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற இறுதிச்சுற்றுப் போட்டியை, படைப்பாளர்கள் காதர், ஜெயகணேஷ், விமலா ஆகியோர் வழிநடத்தினர்.

காலிறுதிச் சுற்றிலும் அரையிறுதிச் சுற்றிலும் பல்வேறு நிலைகளைக் கடந்து வந்த போட்டியாளர்கள் உற்சாகத்துடன் இறுதிச்சுற்றில் பங்கேற்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்