Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் ஆகாயப் படை நடத்தும் முதல் இணையக் கண்காட்சி இன்று தொடக்கம்

சிங்கப்பூர் ஆகாயப் படையின் ஆற்றலையும் திறனையும் தெரிந்துகொள்ள முதன்முறை இணையக் கண்காட்சி நடத்தப்படுகிறது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் ஆகாயப் படையின் ஆற்றலையும் திறனையும் தெரிந்துகொள்ள முதன்முறை இணையக் கண்காட்சி நடத்தப்படுகிறது.

வரும் 19ஆம் தேதி வரை நீடிக்கும் கண்காட்சியில், ஆகாயப் படையின் பயிற்சிகள், வல்லமை ஆகியன பற்றி இணைய விளையாட்டுகள், இருவழித் தொடர்புக் காணொளிகள் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

ஆகாயப் படையின் வரலாற்றையும் அதன் முன்னேற்றத்தையும் கண்காட்சி பறைசாற்றுகிறது.

25க்கும் மேற்பட்ட விமானங்களின் முப்பரிமாண வடிவங்களையும் ஆகாயப் படையின் வேறு வளங்களையும் பார்வையிடலாம்.

வான் நோக்கிச் சுடுதல், விநாடி வினா உட்பட நான்கு புதிர் விளையாட்டுகளிலும் பங்கேற்கலாம்.

ஆகாயத் தற்காப்பு, தேடல் மீட்பு நடவடிக்கை ஆகியன பற்றி இணையத்தில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்படுகிறது.

இதற்குமுன் 2016இல் ஆகாயப் படையின் கண்காட்சி நடத்தப்பட்டது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்