கப்பல் ஊழியரை விரைந்து காப்பாற்றிய வீரர்கள் (காணொளி)
சிங்கப்பூர் கரைக்கு அப்பால் சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் கப்பல் ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்தார் திரு சென்.
சிங்கப்பூர் கரைக்கு அப்பால் சுமார் 200 கிலோமீட்டர் தூரத்தில் கப்பல் ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்தார் திரு சென்.
சென்ற வாரம் அவருக்கு திடீரென்று நெஞ்சு வலிக்கத் தொடங்கியது.
சற்றும் தாமதியாமால், அவர் இருந்த இடத்திற்கு விரைந்தது சிங்கப்பூர் ஆகாயப் படையின் மீட்புக் குழு. சூப்பர் புயூமா ஹெலிகாப்டர் மூலமாகத் திரு சென் உடனடியாக மீட்கப்பட்டார்.
பின் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
"ஆகாயப் படை என்னை மீட்டவுடன் நம்பிக்கை பிறந்தது" என்று மீட்புக் குழுவினருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார் திரு சென்.