Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'இறந்த பல்லி கிடந்த தின்பண்டப் பொட்டலம் நிறுவனத்தின் முந்தைய வளாகத்தில் தயாரிக்கப்பட்டது'

இறந்த பல்லி கிடந்த தின்பண்டப் பொட்டலம், IRVINS நிறுவனத்தின் முந்தைய வளாகத்தில் தயாரிக்கப்பட்டது என்று வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
'இறந்த பல்லி கிடந்த தின்பண்டப் பொட்டலம் நிறுவனத்தின் முந்தைய வளாகத்தில் தயாரிக்கப்பட்டது'

(படம்: Facebook/Jane Holloway)

இறந்த பல்லி கிடந்த தின்பண்டப் பொட்டலம், IRVINS நிறுவனத்தின் முந்தைய வளாகத்தில் தயாரிக்கப்பட்டது என்று வேளாண், உணவு, கால்நடை மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

IRVINS நிறுவனம் பயன்படுத்திய முந்தைய வளாகம், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதன் செயல்பாடுகளை நிறுத்தியது.

IRVINS Salted Egg fish skin திண்பண்டத்தை சாப்பிட்டுக்கொண்டிருந்த போது பொட்டலத்தில் பல்லியிருந்ததைக் ஜேன் ஹொலோவே என்ற ஆடவரின் குடும்பத்தினர் கண்டனர்.

பல்லியுடன் உணவுப் பொட்டலத்தையும் படமெடுத்து சென்ற ஆண்டு Faceook-இல் பதிவேற்றம் செய்து நிறுவனம் பற்றி புகார் செய்திருந்தார் ஜேன். அது சுமார் 9,000 முறை பகிர்ந்து கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, IRVINS நிறுவனத்தின் துணை நிறுவனர் சம்பவத்திற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

சம்பவம் குறித்து ஆணையத்திற்கு ஜனவரி மாதம் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து அது IRVINS நிறுவனம் தற்போது இயங்கிவரும் வளாகத்தைச் சோதனை செய்தது.

நிறுவனத்தின் தரக் கட்டுப்பாட்டுச் சோதனைகளை மேம்படுத்துமாறு ஆணையம் அறிவுறுத்தியது.

IRVINS நிறுவனம் சோதனைகளைத் தற்போது மேம்படுத்தியுள்ளதாகவும், நிறுவனம் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுகிறதா என்பதை அறிய தொடர்ந்து அவ்வப்போது சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஆணையம் குறிப்பிட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்