ஏரியில் விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய பிரிட்டிஷ் சுற்றுப்பயணிகளுக்கு விருது
புக்கிட் பாத்தோக் பூங்கா ஏரியில் விழுந்த பெண்ணைக் காப்பற்றிய பிரிட்டிஷ் சுற்றுப்பயணிகளுக்குச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை விருது வழங்கியுள்ளது.
புக்கிட் பாத்தோக் பூங்கா ஏரியில் விழுந்த பெண்ணைக் காப்பற்றிய பிரிட்டிஷ் சுற்றுப்பயணிகளுக்குச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை விருது வழங்கியுள்ளது.
கடந்த மாதம் (செப்டம்பர்) 24ஆம் தேதி பூங்கா வழியே சென்றுகொண்டிருந்த பிருவின் (Brewin) தம்பதி அங்குள்ள Lake Guilin ஏரியில் பெண் தத்தளித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தனர்.
ஓய்வுபெற்ற முக்குளிப்பு பயிற்றுவிப்பாளர்களாகிய இருவரும் உடனே பெண்ணைக் காப்பற்றச் செயல்பட்டனர்.
அவர்களுடைய உதவிக்காகத் தம்பதிக்கு இரு விருதுகளை வழங்கி அங்கீகரித்ததாக குடிமைத் தற்காப்புப் படை அதன் Facebook பக்கத்தில் தெரிவித்துள்ளது.