உயர்நிலைப் பள்ளி விண்ணப்ப முடிவுகள் அடுத்த புதன்கிழமை வெளிவரும்
அன்று காலை 9 மணிக்கு முடிவுகளை மாணவர்கள் பெற்றுக்கொள்வர் எனக் கல்வி அமைச்சு தெரிவித்தது.
தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான, உயர்நிலைப் பள்ளி விண்ணப்ப முடிவுகள், வரும் 19ஆம் தேதி புதன்கிழமை வெளியிடப்படும்.
அன்று காலை 9 மணிக்கு முடிவுகளை மாணவர்கள் பெற்றுக்கொள்வர் எனக் கல்வி அமைச்சு தெரிவித்தது.
மாணவர்களின் தொடக்கப்பள்ளியிலும், கல்வி
அமைச்சின் இணையத்தளத்திலும் முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
அமைச்சுடன் உள்ளூர்க் கைத்தொலைபேசி எண்ணைப் பதிவுசெய்து கொண்டவர்களுக்கு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும்.
குறிப்பிடப்பட்டிருக்கும் உயர்நிலைப் பள்ளிக்கு மாணவர்கள், இம்மாதம் 20ஆம் தேதி வியாழக்கிழமை காலை எட்டரை மணிக்குச் செல்லவேண்டும்.