ரயிலில் சென்ற ஆடவரை மானபங்கம் செய்த பாதுகாவலருக்குச் சிறை
ரயிலில் சென்ற ஆடவரை மானபங்கம் செய்த பாதுகாவலருக்கு மூன்று வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரயிலில் சென்ற ஆடவரை மானபங்கம் செய்த பாதுகாவலருக்கு மூன்று வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
67 வயது மாரிமுத்து ஜெயபால் அந்த 20 வயது ஆடவரை மானபங்கம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
மாரிமுத்து பாதிக்கப்பட்ட ஆடவரிடம் ஆபாசக் காணொளியைக் காட்டிய குற்றச்சாட்டும் கருத்திற்கொள்ளப்பட்டு தண்டனை நிர்ணயிக்கப்பட்டது.
சம்பவம் கடந்த ஆண்டு ஜூலை 4 அன்று மதியம் 3.30 மணி அளவில் நேர்ந்தது.
பாதிக்கப்பட்ட அந்த 20 வயது மாணவர் இயோ சூ காங் ரயில் நிலையத்திலிருந்து புக்கிட் கோம்பாக் நிலையத்தை நோக்கி ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார்.
வழியில் ரயிலில் ஏறிய மாரிமுத்து மாணவர் அருகே உட்கார்ந்தார்.
கைத்தொலைபேசியிலிருந்த ஆபாசக் காணொளியை காட்டி மாணவரை மானபங்கம் செய்திருக்கிறார் மாரிமுத்து.
ரயிலிலிருந்து வெளியேறிய மாணவரை மாரிமுத்து தொடர, அவர் மீது புகார் பதிவுசெய்ய முடிவுசெய்தார் மாணவர்.
மாணவரை மானபங்கம் செய்த குற்றத்துக்கு ஆடவருக்கு, ஈராண்டு வரை சிறைத்தண்டனையோ அபராதமோ பிரம்படியோ அல்லது அதிகபட்சமாக மூன்றுமோ விதிக்கப்பட்டிருக்கலாம்.