Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பாதுகாவல்துறை அதிகாரிகளுக்கு மேம்பட்ட பதுகாப்பு வழங்க, வெளியிடப்பட்ட சுகாதாரத் தரநிலைகள்

பாதுகாவல்துறை அதிகாரிகளுக்கு மேம்பட்ட பாதுகாப்பு வழங்கும் நோக்கில் புதிய வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரத் தரநிலைகள் வெளியிடப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -

பாதுகாவல்துறை அதிகாரிகளுக்கு மேம்பட்ட பாதுகாப்பு வழங்கும் நோக்கில் புதிய வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரத் தரநிலைகள் வெளியிடப்பட்டுள்ளன.

கட்டட வளாகத்திற்குள் நுழையும் வருகையாளர்களைச் சோதித்தல், சுற்றுக்காவலில் ஈடுபடுதல் போன்ற பணிகளுக்காகவே அவர்களுக்குச் சம்பளம் வழங்கப்படுகிறது.

ஆனால், கார் நிறுத்துமிட முகப்பிலுள்ள தானியங்கிக் குறுக்குச் சட்டத்தைச் சரி செய்தல், மின்விளக்குகளை மாற்றுதல், செடிகளுக்கு நீர் ஊற்றுதல் போன்ற வேறு சில பணிகளையும் அவர்கள் செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

அவை, எளிய பணிகள்போல் தோன்றினாலும், நீண்டநேரம் பணியாற்றும் அதிகாரிகளுக்கு அது கூடுதல் சோர்வை ஏற்படுத்தும்.

அப்போது விபத்து நேரவும், காயம் ஏற்படவும்கூட வாய்ப்பு உண்டு.

எனவே, வேலையிடங்களில் அதிகாரிகளைச் சரியாக நிர்வகிக்க, புதிய தரநிலைகள் உதவும் என்று பாதுகாவல் துறை நிறுவனங்கள் குறிப்பிட்டன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்