Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

செங்காங்கில் தனது 2 வயதுக் குழந்தையைக் கொலை செய்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

செங்காங்கில், தனது இரண்டு வயதுக் குழந்தையைக் கொலை செய்ததாக, 34-வயது ஆடவர்மீது நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவிருக்கிறது. காவல்துறை அந்தத் தகவலை வெளியிட்டது.  

வாசிப்புநேரம் -
செங்காங்கில் தனது 2 வயதுக் குழந்தையைக் கொலை செய்ததாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

படம்: Google Street View

செங்காங்கில், தனது இரண்டு வயதுக் குழந்தையைக் கொலை செய்ததாக, 34-வயது ஆடவர்மீது நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவிருக்கிறது. காவல்துறை அந்தத் தகவலை வெளியிட்டது.

நேற்று முன்தினம், இரவு பத்தரை மணியளவில் புளோக் 163B ரிவர்வேல் கிரசெண்ட்டில் இருந்து உதவிகேட்டு அழைப்பு வந்ததாகக் காவல்துறை குறிப்பிட்டது.

காவல்துறையினர் அங்கு சென்றபோது, வீட்டின் படுக்கையறையில் குழந்தை அசைவின்றிக் காணப்பட்டது.

செங்காங் பொது மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட குழந்தை, நேற்று அதிகாலை பன்னிரண்டரை மணியளவில் மாண்டதாக அறிவிக்கப்பட்டது.

குழந்தையின் தந்தையும், படுக்கையறையில் காயங்களோடு காணப்பட்டார். அந்தச் சம்பவத்தை இயற்கைக்கு மாறான மரணம் என்று காவல்துறை வகைப்படுத்தியுள்ளது. விசாரணை தொடர்கிறது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்