சிராங்கூன் நார்த்தில் தீ - 70 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்
சிங்கப்பூர்: சிராங்கூன் நார்த் அவென்யூ 1இல் (Serangoon North Avenue 1) இருக்கும் அடுக்குமாடி கட்டம் 147இல் இன்று (ஜனவரி 17) இரவு தீப்பற்றிக்கொண்டது.
சிங்கப்பூர்: சிராங்கூன் நார்த்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டில் நேற்று மாலை தீ பற்றியதால் குடியிருப்பாளர்கள் 70 பேர் அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
சிராங்கூன் நார்த் அவென்யூ 1 புளோக் 147 இரண்டாம் தளத்தில் உள்ள வீட்டில் தீப்பற்றியது.
சுவாசக் கோளாற்றுக்கு ஆளான இரண்டு பெண்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவருக்கு வயது 80. மற்றவருக்கு வயது 30 என்று குடிமைத் தற்காப்புப் படையினர் கூறினர்.
தீ விபத்துக் காரணமாக மின்சாரத் தடை ஏற்பட்டது.
குடியிருப்பின் 12 ஆவது மாடி வரை இருள் பரவியிருந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்.