சிங்கப்பூரில் புதிதாக 21 பேருக்குக் கிருமித்தொற்று; அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்
சிங்கப்பூரில் இன்று புதிதாக 21 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இன்று புதிதாக 21 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.
சமூக அளவில் புதிதாக யாருக்கும் கிருமித்தொற்று அடையாளம் காணப்படவில்லை.
பாதிக்கப்பட்ட 21 பேரும் சிங்கப்பூருக்கு வந்ததிலிருந்து வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
சிங்கப்பூரில் மொத்தம் 60,575 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
30 பேர் மாண்டனர்.