சிங்கப்பூரில் புதிதாக 17 பேருக்குக் கிருமித்தொற்று - அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்
சிங்கப்பூரில் இன்று புதிதாக 17 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இன்று புதிதாக 17 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.
சிங்கப்பூர் வந்ததிலிருந்தே அவர்கள், வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருகின்றனர் அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
உள்ளூர் அளவில் யாருக்கும் பாதிப்பு இல்லை.
தற்போதைய நிலவரப்படி சிங்கப்பூரில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 58,946.