சிங்கப்பூரில் இன்று 17 பேருக்குக் கிருமித்தொற்று; சுமார் இரு வாரங்களாக சமூக அளவில் பாதிப்பில்லை
சிங்கப்பூரில் புதிதாக 17 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் புதிதாக 17 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.
சுமார் இரு வாரங்களாகச் சமூக அளவிலோ, வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளிலோ யாருக்கும் நோய்த்தொற்று அடையாளம் காணப்படவில்லை.
புதிதாகப் பாதிக்கப்பட்ட 17 பேரும் சிங்கப்பூருக்கு வந்ததிலிருந்து வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.