சிங்கப்பூரில் புதிதாக 42 பேருக்குக் கிருமித்தொற்று; மார்ச் மாதத்திலிருந்து பதிவான ஆகக் குறைவான எண்ணிக்கை
சிங்கப்பூரில் இன்று புதிதாக 42 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இன்று புதிதாக 42 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மார்ச் மாதத்திலிருந்து தினசரி பதிவாகும் எண்ணிக்கையில் இதுவே ஆகக் குறைவானது.
புதிதாய் பாதிக்கப்பட்டவர்களையும் சேர்த்து, எண்ணிக்கை 55,395-ஆனது.
இன்று புதிதாகக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டோரில் பெரும்பாலோர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள்.
தற்போது அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
சமூக அளவில் ஒரு சிங்கப்பூரர் பாதிக்கப்பட்டுள்ளார்.
புதிதாகக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டோரில் 11 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள்.
சிங்கப்பூருக்கு வந்ததிலிருந்து அவர்கள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருகின்றனர்.