Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19: சிங்கப்பூரில் புதிதாக 20 பேருக்குக் கிருமித்தொற்று; சமூக அளவில் ஒருவருக்குப் பாதிப்பு

சிங்கப்பூரில் இன்று புதிதாக 20 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
COVID-19: சிங்கப்பூரில் புதிதாக 20 பேருக்குக் கிருமித்தொற்று; சமூக அளவில் ஒருவருக்குப் பாதிப்பு

(கோப்புப் படம்: AFP/Roslan Rahman)

சிங்கப்பூரில் இன்று புதிதாக 20 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்களையும் சேர்த்து இங்கு பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 57,685 ஆனது.

சமூக அளவில் வேலை அனுமதி அட்டை வைத்திருக்கும் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

புதிதாகக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டோரில் ஐவர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.

சிங்கப்பூருக்குத் திரும்பியதிலிருந்து அவர்கள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்