COVID-19: சிங்கப்பூரில் புதிதாக 15 பேருக்குக் கிருமித்தொற்று; சமூக அளவில் யாருக்கும் பாதிப்பில்லை
சிங்கப்பூரில் இன்று புதிதாக 15 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இன்று புதிதாக 15 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர்களையும் சேர்த்து இங்கு பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 57,700ஆனது.
சமூக அளவில் யாருக்கும் பாதிப்பு இல்லை.
புதிதாகக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டோரில் ஐவர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.
சிங்கப்பூருக்குத் திரும்பியதிலிருந்து அவர்கள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.