COVID-19: புதிதாக நால்வருக்குக் கிருமித்தொற்று; தொடர்ந்து 10ஆவது நாளாகச் சமூக அளவில் பாதிப்பு இல்லை
சிங்கப்பூரில் புதிதாக நால்வருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.
சிங்கப்பூரில் புதிதாக நால்வருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.
தொடர்ந்து 10ஆவது நாளாக, சமூக அளவிலோ, வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியிலோ யாரும் பாதிக்கப்படவில்லை.
புதிதாக பாதிக்கப்பட்ட நால்வரும் சிங்கப்பூருக்கு வந்ததிலிருந்து வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அவர்களையும் சேர்த்து இங்கு கிருமித்தொற்று உறுதியானோர் மொத்த எண்ணிக்கை 58ஆயிரத்து-143ஆனது.