சிங்கப்பூரில் மேலும் 5 பேருக்குச் சமூக அளவில் நோய்த்தொற்று - அவர்கள் அனைவரும் டான் டொக் செங் மருத்துவமனையுடன் தொடர்புடையவர்கள்
சிங்கப்பூரில் மேலும் 5 பேருக்குச் சமூக அளவில் நோய்த்தொற்று - அவர்கள் அனைவரும் டான் டொக் செங் மருத்துவமனையுடன் தொடர்புடையவர்கள்
சிங்கப்பூரில் இன்று புதிதாக 17 பேருக்குக் COVID-19 கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமூக அளவில் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அனைவரும் டான் டொக் செங் மருத்துவமனையுடன் தொடர்புடையவர்கள்.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை.
வெளிநாட்டிலிருந்து இங்கு வந்த 12 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்கள் சிங்கப்பூர் வந்ததிலிருந்தே வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இதுவரை சிங்கப்பூரில் 61,252 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 415 பேர் தவிர ஏனையோர் முழுமையாக உடல் நலம் தேறிவிட்டனர்.