சிங்கப்பூரில் நேற்று சமூக அளவில் பாதிக்கப்பட்ட மூவரின் விவரங்கள்
சிங்கப்பூரில் நேற்று சமூக அளவில் பாதிக்கப்பட்ட மூவரின் விவரங்கள்
சிங்கப்பூரில் சமூக அளவில் நேற்று மூவருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
மூவருக்கும் எவ்வாறு கிருமி தொற்றியது என்பது இன்னும் தெரியவில்லை.
* ION Orchard கடைத்தொகுதியில் பணிபுரியும் Guardian கடை ஊழியர்
* Raffles City Tower, One Raffles Quay ஆகிய இடங்களில் பணிபுரியும் துப்புரவாளர்
* இழுவைப்படகில் பணிபுரியும் கப்பல் ஊழியர்
ஆகியோர் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஹவ்காங் அவென்யூ 8 (Hougang Avenue 8) வட்டாரத்தில் 4,000-க்கும் மேற்பட்டோருக்குக் கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டது.
யாருக்கும் கிருமித்தொற்று இல்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.