மார்ச் 12 ஆம் தேதிக்குப் பிறகு முதன்முறை சமூகத் தனிமைப்படுத்தப்படும் வசதிகளில் 100க்கும் குறைவானவர்களே உள்ளனர்
சிங்கப்பூரில் மேலும் 20 பேர் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அவர்களையும் சேர்த்து இங்கு முழுமையாக உடல் நலம் தேறியோர் எண்ணிக்கை மொத்தம் 57,784.
சிங்கப்பூரில் மேலும் 20 பேர் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
அவர்களையும் சேர்த்து இங்கு முழுமையாக உடல் நலம் தேறியோர் எண்ணிக்கை மொத்தம் 57,784.
சமூகத் தனிமைப்படுத்தப்படும் வசதிகளில் 59 பேர் உள்ளனர். மருத்துவமனைகளில் 30 பேர் இருக்கின்றனர். அவர்களில் எவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இல்லை.
சமூகத் தனிமைப்படுத்தப்படும் வசதிகளில் 100க்கும் குறைவானவர்களே இருப்பது மார்ச் 12 ஆம் தேதிக்குப் பிறகு இதுவே முதன்முறை.
நேற்று மேலும் 9 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
சமூக அளவில் எவருக்கும் பாதிப்பு இல்லை.
புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் எட்டுப் பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள். அவர்களில் நால்வர் பிலிப்பீன்ஸிலிருந்து வந்தவர்கள். அவர்களில் இருவர் சிங்கப்பூரர்கள். இன்னும் இருவர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள்.
மேலும் இருவர் இந்தோனேசியாவிலிருந்து திரும்பியவர்கள். இந்தியாவிலிருந்து ஒருவரும், மியன்மாரிலிருந்து மற்றொருவரும் இங்கு வந்து சேர்ந்தனர்.
வழக்கமான பரிசோதனையில்,வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் உள்ள ஒருவருக்கு நோய்த் தொற்று முன்னர் இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்டது.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் 57,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.