சிங்கப்பூரில் நேற்று புதிதாக 1,090பேருக்குக் கிருமித்தொற்று
சிங்கப்பூரில் நேற்று புதிதாக 1,090பேருக்குக் கிருமித்தொற்று
சிங்கப்பூரில் நேற்று புதிதாக 1,090 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 20-ஆம் தேதியிலிருந்து பதிவான ஆகக் குறைவான தினசரி எண்ணிக்கை அது.
விவரங்கள்:-
* உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்டவர்கள்: 1,086 பேர்
* சமூக அளவில் பாதிக்கப்பட்டவர்கள்: 1,064பேர்
* வெளிநாட்டு ஊழியர் விடுதியைச் சேர்ந்தவர்கள்: 22 பேர்
* வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள்: 4 பேர்
* வாராந்திர நோய்த்தொற்று அதிகரிப்பு விகிதம்: 0.74
வாராந்திர நோய்த்தொற்று அதிகரிப்பு விகிதம் என்பது கடந்த வாரமும் அதற்கு முந்திய வாரமும் சமூக அளவில் பதிவான தொற்றுச் சம்பவங்களுக்கு இடையிலான விகிதம்.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மொத்தம் : 259,875