சிங்கப்பூரில் மேலும் 11 பேர் COVID-19 தொற்றால் மாண்டனர் - அனைவரும் 65 வயதைத் தாண்டியவர்கள்
சிங்கப்பூரில் COVID-19 நோய்ப்பரவலால் மேலும் 11 பேர் மாண்டனர்.
சிங்கப்பூரில் COVID-19 நோய்ப்பரவலால் மேலும் 11 பேர் மாண்டனர்.
மாண்டவர்கள் 66 வயதிலிருந்து 98 வயதுக்கு உட்பட்ட மூத்தோர். அவர்களில் ஐவர் ஆண்கள், 6 பேர் பெண்கள். மாண்ட 11 பேரும் சிங்கப்பூர்க் குடிமக்கள் என்று சுகாதார அமைச்சு தகவல் அளித்தது.
அவர்களில் மூவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்று அமைச்சு குறிப்பிட்டது.
மாண்டவர்களில் 6 பேர் ஒரு முறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்.
மற்ற இருவர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்.
மாண்ட அனைவரிடமும் மற்ற சுகாதாரப் பிரச்சினைகள் இருந்ததாக அமைச்சு குறிப்பிட்டது.
அவர்களையும் சேர்த்து சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை 183 ஆனது.