Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் மேலும் 11 பேர் COVID-19 தொற்றால் மாண்டனர் - அனைவரும் 65 வயதைத் தாண்டியவர்கள்

சிங்கப்பூரில் COVID-19 நோய்ப்பரவலால் மேலும் 11 பேர் மாண்டனர்.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் மேலும் 11 பேர் COVID-19 தொற்றால் மாண்டனர் - அனைவரும் 65 வயதைத் தாண்டியவர்கள்

(படம்: Calvin Oh)

சிங்கப்பூரில் COVID-19 நோய்ப்பரவலால் மேலும் 11 பேர் மாண்டனர்.

மாண்டவர்கள் 66 வயதிலிருந்து 98 வயதுக்கு உட்பட்ட மூத்தோர். அவர்களில் ஐவர் ஆண்கள், 6 பேர் பெண்கள். மாண்ட 11 பேரும் சிங்கப்பூர்க் குடிமக்கள் என்று சுகாதார அமைச்சு தகவல் அளித்தது.

அவர்களில் மூவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்று அமைச்சு குறிப்பிட்டது.

மாண்டவர்களில் 6 பேர் ஒரு முறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்.

மற்ற இருவர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்.

மாண்ட அனைவரிடமும் மற்ற சுகாதாரப் பிரச்சினைகள் இருந்ததாக அமைச்சு குறிப்பிட்டது.

அவர்களையும் சேர்த்து சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை 183 ஆனது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்