Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் 62 வயது பெண் உட்பட கிருமித்தொற்றால் மூவர் மரணம்

சிங்கப்பூரில் COVID-19 நோய்த்தொற்றால் மேலும் மூவர் மாண்டனர்.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் 62 வயது பெண் உட்பட கிருமித்தொற்றால் மூவர் மரணம்

(கோப்புப் படம்: Marcus Mark Ramos)

சிங்கப்பூரில் COVID-19 நோய்த்தொற்றால் மேலும் மூவர் மாண்டனர்.

அவர்களில் ஒருவரான 74 வயது ஆடவர், ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 19) மாண்டார்.

வேறு மருத்துவப் பிரச்சினைக்காகக் கடந்த மாதம் 31ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு முதலில் கிருமித்தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இம்மாதம் 9ஆம் தேதி அவருக்கு நோய் தொற்றியிருந்தது உறுதியானது.

ஒருமுறை தடுப்பூசி போட்டிருந்த அவருக்கு, நாள்பட்ட சிறுநீரக நோய் உள்ளிட்ட சில சுகாதாரப் பிரச்சினைகள் இருந்தன.

மாண்டவர்களில், மற்றொருவர் தடுப்பூசி போடாத 62 வயது மாது.

மூன்றாமவர், தடுப்பூசி போட்டுமுடித்திருந்த 83 ஆடவர்.

அவர்கள் இருவரும் திங்கட்கிழமை (செப்டம்பர் 20) மாண்டதாக அமைச்சு தெரிவித்தது.

இருவருக்கும் மற்ற சுகாதாரப் பிரச்சினைகள் இருந்தன.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் மாண்டோர் மொத்த எண்ணிக்கை, 65. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்