Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19 தொற்றால் சிங்கப்பூரில் மேலும் 9 பேர் மரணம் - அனைவரும் 50 வயதைத் தாண்டியவர்கள்

சிங்கப்பூரில் மேலும் 9 பேர் கிருமித்தொற்றால் மாண்டனர்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் மேலும் 9 பேர் கிருமித்தொற்றால் மாண்டனர்.

அவர்கள் 52 வயதுக்கும் 98 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மாண்டோர் அனைவரும் சிங்கப்பூரர்கள்.

அவர்களில் 6 பேர் ஆண்கள், மூவர் பெண்கள்.

அவர்களில் 6 பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை; இருவர் ஒரு முறை மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்; ஒருவர் மட்டுமே முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்.

அவர்களில் 8 பேருக்கு ஏற்கனவே பல்வேறு மருத்துவப் பிரச்சனைகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஒருவருக்கு மற்ற எந்தவிதமான சுகாதாரப் பிரச்சினைகள் இல்லை என்றும் அவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் மாண்டோர் எண்ணிக்கை 192க்கு உயர்ந்துள்ளது.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்