சிங்கப்பூரில் உயிர்வாயு சிகிச்சை அளிக்கப்படும் COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை 147ஆக உயர்வு
சிங்கப்பூரில் COVID-19 நோயாளிகள் 1,109 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.
சிங்கப்பூரில் COVID-19 நோயாளிகள் 1,109 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.
அவர்களில் பெரும்பாலோர் உடல்நலத்துடன் இருப்பதாகச் சுகாதார அமைச்சு கூறியது.
147 பேருக்கு உயிர்வாயு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் 17 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
கடுமையாகப் பாதிக்கப்பட்டோரில் 135 பேர் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தவர்கள்.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை மொத்தம் 79,899.