சிங்கப்பூரில் உள்ளூர் அளவில் புதிதாக 1,173 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி
சிங்கப்பூரில் உள்ளூர் அளவில் புதிதாக 1,173 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதைச் சுகாதார அமைச்சு உறுதிசெய்துள்ளது.
சிங்கப்பூரில் உள்ளூர் அளவில் புதிதாக 1,173 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதைச் சுகாதார அமைச்சு உறுதிசெய்துள்ளது.
அவர்களில் 1,038 பேர் சமூக அளவில் பாதிக்கப்பட்டனர்.
135 பேர் வெளிநாட்டு ஊழியர் தங்கும்விடுதியில் வசிப்போர்.
பாதிக்கப்பட்டவர்களில் 311 பேர், 60 வயதிற்கு மேற்பட்ட மூத்தோர்.
வெளிநாட்டிலிருந்து வந்தவர்களில் ஐவர் பாதிக்கப்பட்டனர்.
அவர்களையும் சேர்த்து நேற்று (செப்டம்பர் 21) புதிதாக 1,178 பேருக்கு நோய் தொற்றியிருப்பது உறுதியானது.