சமூக அளவில் மேலும் 2,721 பேருக்கு COVID-19 தொற்று
சிங்கப்பூரில் புதிதாக 2,976 பேருக்கு COVID-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் புதிதாக 2,976 பேருக்கு COVID-19 தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
2,721 பேர் சமூக அளவில் பாதிக்கப்பட்டவர்கள்.
251 பேர் தங்கும் விடுதிகளில் உள்ள வெளிநாட்டு ஊழியர்கள்.
4 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்
கடந்த வாரங்களின் செவ்வாய்க்கிழமைகளன்று பதிவான தினசரி தொற்று எண்ணிக்கைகளுடன் ஒப்புநோக்க, நேற்று பதிவான எண்ணிக்கையில் கணிசமான உயர்வு இல்லை என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் (Ong Ye Kung), Facebook பதிவில் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு நடைமுறைகள் கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த உதவுவதாக அவர் கூறினார்.
தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் இரட்டிப்பாகவில்லை என்றார் அவர்.