சிங்கப்பூரில் மேலும் 21 பேர் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்தனர்
சிங்கப்பூரில் மேலும் 21 பேர் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்தனர்
சிங்கப்பூரில் நேற்று மேலும் 21 பேர் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்து இருப்பிடம் திரும்பியுள்ளனர்.
அவர்களையும் சேர்த்து இங்கு முழுமையாக குணமடைந்தோர் எண்ணிக்கை 60,933.
மருத்துவமனைகளில் கிருமித்தொற்று நோயாளிகள் 133 பேர் உள்ளனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
சமூகத் தனிமைப்படுத்தும் வசதிகளில் 262 பேர் சிகிச்சை பெறுகின்றனர். சிங்கப்பூரில் நோய்த்தொற்று காரணமாக 31 பேர் மாண்டனர்.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மொத்தம் 61,359.