சிங்கப்பூரில் மேலும் 8 பேர் நோய்த்தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளனர்
சிங்கப்பூரில் மேலும் 8 பேர் நோய்த்தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளனர்
சிங்கப்பூரில் மேலும் 8 பேர் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்து வசிப்பிடம் திரும்பியுள்ளனர்.
அவர்களையும் சேர்த்து இங்கு முழுமையாகக் குணமடைந்தோர் எண்ணிக்கை 57,341.
இன்னும் 29 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அவர்களில் யாரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இல்லை.
சமூகத் தனிமைப்படுத்தும் வசதிகளில் 268 பேர் தங்கியுள்ளனர்.
அவர்களிடம் நோய்த்தொற்றுக்கான லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்படுவதாக அமைச்சு கூறியது.
தற்போதைய நிலவரப்படி சிங்கப்பூரில் 57,665 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. 27 பேர் மாண்டனர்.