COVID-19: சிங்கப்பூரில் மேலும் 7 பேர் குணமடைந்து வசிப்பிடம் திரும்பினர்
COVID-19: சிங்கப்பூரில் மேலும் 7 பேர் குணமடைந்து வசிப்பிடம் திரும்பினர்
சிங்கப்பூரில் நேற்று மேலும் 7 பேர் COVID-19 நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வசிப்பிடம் திரும்பினர்.
அவர்களையும் சேர்த்து 57,890 பேர் முழுமையாகக் குணமடைந்துள்ளனர்.
இன்னும் 40 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களில் யாரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இல்லை.
சமூகத் தனிமைப்படுத்தும் வசதிகளில் 29 பேர் பராமரிக்கப்படுகின்றனர்.
அவர்களிடம் நோய்த்தொற்றுக்கான லேசான அறிகுறிகள் மட்டுமே தென்படுவதாகச் சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.
சிங்கப்பூரில் தற்போதைய நிலவரப்படி 57,987 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. 28 பேர் மாண்டனர்.