சிங்கப்பூரில் மேலும் 9 பேர் COVID-19 கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்தனர்
சிங்கப்பூரில் மேலும் 9 பேர் COVID-19 கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்தனர்
சிங்கப்பூரில் நேற்று மேலும் 9 பேர் கொரோனா கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
அவர்களையும் சேர்த்து இங்கு முழுமையாக உடல்நலம் தேறியோர் எண்ணிக்கை 60,131.
மருத்துவமனைகளில் 39 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார்.
மேலும் 121 பேர் சமூகத் தனிமைப்படுத்தப்படும் வசதிகளில் உள்ளனர்.
சிங்கப்பூரில் COVID-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 60,321.
மாண்டோர் எண்ணிக்கை 30-ஆக உள்ளது.