சிங்கப்பூரில் மேலும் 13 பேர் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்தனர்
சிங்கப்பூரில் நேற்று மேலும் 13 பேர் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்து, தங்கள் வசிப்பிடம் திரும்பினர்.
சிங்கப்பூரில் நேற்று மேலும் 13 பேர் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்து, தங்கள் வசிப்பிடம் திரும்பினர்.
அவர்களையும் சேர்த்து, சிங்கப்பூரில் நோய்த்தொற்றிலிருந்து முழுமையாக உடல் நலம் தேறியோர் எண்ணிக்கை மொத்தம் 58,784.
மருத்துவமனைகளில் 54 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
அவர்களில் எவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இல்லை.
மேலும் 216 பேர் சமூகத் தனிமைப்படுத்தப்படும் வசதிகளில் உள்ளனர்.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,083.