சிங்கப்பூரில் நேற்று மேலும் 20 பேர் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்தனர்
சிங்கப்பூரில் நேற்று மேலும் 20 பேர் கொரோனா கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்து வசிப்பிடம் திரும்பினர்.
சிங்கப்பூரில் நேற்று மேலும் 20 பேர் கொரோனா கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்து வசிப்பிடம் திரும்பினர்.
அவர்களையும் சேர்த்து இங்கு முழுமையாக உடல்நலம் தேறியோர் எண்ணிக்கை 60,806.
மருத்துவமனைகளில் 131 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் எவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இல்லை.
மேலும் 267 பேர் சமூகத் தனிமைப்படுத்தப்படும் வசதிகளில் உள்ளனர்.
சிங்கப்பூரில் COVID-19 நோய்த்தொற்றால் 61,235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாண்டோர் எண்ணிக்கை 31-ஆக உள்ளது.