COVID-19: சிங்கப்பூரில் மேலும் 38 பேர் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்தனர்
சிங்கப்பூரில், நேற்று மேலும் 38 பேர் கொரோனா கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்து வசிப்பிடம் திரும்பினர்.
சிங்கப்பூரில், நேற்று மேலும் 38 பேர் கொரோனா கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்து வசிப்பிடம் திரும்பினர்.
அவர்களையும் சேர்த்து, இங்கு முழுமையாக உடல்நலம் தேறியோர் எண்ணிக்கை 61,740.
மருத்துவமனைகளில் 158 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
அவர்களில் ஒருவர், கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.
மேலும் 291 பேர் சமூகத் தனிமைப்படுத்தப்படும் இடங்களில் உள்ளனர்.
சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 62,223.
மாண்டோர் எண்ணிக்கை 34-ஆக உள்ளது.