சிங்கப்பூரில் போதுமான அளவு COVID-19 சுய பரிசோதனைக் கருவிகள் உள்ளன - விநியோக நிறுவனங்கள்
சிங்கப்பூரில் போதுமான அளவு COVID-19 சுய பரிசோதனைக் கருவிகள் உள்ளன - விநியோக நிறுவனங்கள்
சிங்கப்பூரில் போதுமான அளவு COVID-19 சுய பரிசோதனைக் கருவிகள் இருப்பதாக விநியோக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சுய பரிசோதனைக் கருவிகளுக்கான விநியோகம் முடுக்கிவிடப்பட்டிருப்பதைத் தொடர்ந்து அவை அவ்வாறு கூறின.
கடைகளில் போதுமான அளவு சுய பரிசோதனைக் கருவிகள் இருப்பதை உறுதிசெய்ய, அவற்றுடன் பணியாற்றி வருவதாக விநியோக நிறுவனங்கள் குறிப்பிட்டன.
சில பேரங்காடிகள், மருந்துக் கடைகள் போன்றவற்றில் சுய பரிசோதனைக் கருவிகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியானது.
அண்மை வாரங்களில், சுய பரிசோதனைக் கருவிகளுக்கான தேவை சுமார் 5 மடங்கு அதிகரித்துள்ளதாக Watsons, Guardian ஆகியவை குறிப்பிட்டன.
சுய பரிசோதனைக் கருவிகளைக் கூடுதல் எண்ணிக்கையில் பெற்றுக்கொள்வதற்கான மாற்று வழிகளை ஆராய்ந்து வருவதாக Watsons நிறுவனம் தெரிவித்தது.