COVID-19 கிருமித்தொற்றைச் சமாளிக்க புருணைக்கு உதவும் சிங்கப்பூர்
COVID-19 கிருமித்தொற்றைச் சமாளிக்க புருணைக்கு உதவும் சிங்கப்பூர்
COVID-19 கிருமித்தொற்றைச் சமாளிக்க புருணைக்கு மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளது சிங்கப்பூர்.
கிருமித்தொற்றைச் சோதிக்கும் 3,000 கருவிகளையும், அதனை அடையாளம்காணும் polymerase chain reaction இயந்திரத்தையும், சிங்கப்பூர் புருணைக்கு வழங்கியுள்ளது.
வெளியுறவு அமைச்சு அதனைத் தெரிவித்தது.
சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் தொலைபேசி வழியாக புருணை சுகாதார அமைச்சர் ஹஜி முகமது இஷாமிடம் ( Haji Mohammad Isham) பேசியதாக அமைச்சு கூறியது.
COVID-19 கிருமித்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் சிங்கப்பூர் தொடர்ந்து புருணைக்கு உதவும் என்றும் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.