சிங்கப்பூரில் தீவிர சிகிச்சைப் பிரிவின் 79.8 விழுக்காட்டுப் படுக்கைகள் நிரம்பிவிட்டன
சிங்கப்பூரிலுள்ள மருத்துவமனைகளில் COVID-19 நோயாளிகள் 1,777 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிங்கப்பூரிலுள்ள மருத்துவமனைகளில் COVID-19 நோயாளிகள் 1,777 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களில் 308 பேருக்கு உயிர்வாயு கொடுக்கப்படுகிறது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள 142 பேரில் 76 பேரின் உடல்நிலை சீராக இல்லை. அவர்கள் அணுக்கமாய்க் கண்காணிக்கப்படுகின்றனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவின் 79.8 விழுக்காட்டுப் படுக்கைகள் நிரம்பியுள்ளன.
இதற்கிடையில், COVID-19 நோயாளிகள் 3,172 பேர் வசிப்பிடம் திரும்பினர்.
அவர்களில் 484 பேர், 60க்கும் அதற்கு மேற்பட்ட வயதுமுடையோர்.
வீட்டிலிருந்தபடியே குணமடைவோர்: 20,895 பேர்
சமூகப் பராமரிப்பு நிலையங்களில்: 4,589 பேர்
COVID-19 சிகிச்சை நிலையங்களில்: 849 பேர்