சிங்கப்பூரில் COVID-19 நோயாளிகள் 1,365 பேர் மருத்துவமனைகளில்
சிங்கப்பூரின் மருத்துவமனைகளில் COVID-19 நோயாளிகள் 1,365 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிங்கப்பூரின் மருத்துவமனைகளில் COVID-19 நோயாளிகள் 1,365 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- 203 பேருக்கு உயிர்வாயு கொடுக்கப்படுகிறது.
- தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள 34 பேரின் உடல்நிலை சீராக இல்லை. அவர்கள் அணுக்கமாய்க் கண்காணிக்கப்படுகின்றனர்.
- 59 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் 56.1 விழுக்காட்டுப் படுக்கைகள் நிரம்பியுள்ளன.
மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருந்த COVID-19 நோயாளிகள் 2,275 பேர் வசிப்பிடம் திரும்பியுள்ளனர்.
அவர்களில் 366 பேர் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள்.
சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தகுதி பெற்றவர்களில் 94 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுவிட்டனர்.
சுமார் 24 விழுக்காட்டினர் booster என்ற மூன்றாவது தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.