இந்தியா, லக்சம்பர்க் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வந்த 14 பேருக்கு நேற்று கிருமித்தொற்று உறுதி
வெளிநாட்டிலிருந்து திரும்பிய 14 பேருக்குச் சிங்கப்பூரில் நேற்று கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.
வெளிநாட்டிலிருந்து திரும்பிய 14 பேருக்குச் சிங்கப்பூரில் நேற்று கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.
சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் - 2
அவர்கள் இந்தியாவிலிருந்து திரும்பியவர்கள்.
சார்ந்திருப்போர் அனுமதி அட்டையின் கீழ் - 2
அவர்கள் இந்தியாவிலிருந்தும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிலிருந்தும் வந்தவர்கள்.
மாணவர் அனுமதி அட்டையின் கீழ் - 1
அவர் இந்தியாவிலிருந்து வந்தார்.
வேலை அனுமதி அட்டையின் கீழ் - 7
அவர்கள் லக்சம்பர்க் (Luxembourg), நேப்பாளம், நெதர்லந்து, பிரிட்டன், இந்தியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஆகிய நாடுகளிலிருந்து வந்தவர்கள்.
வேலை அனுமதிச்சீட்டின் கீழ் - 1
அவர் இந்தோனேசியாவிலிருந்து வந்த வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்.
குறுகியகால வருகை அட்டையின் கீழ் - 1
அவர் சிங்கப்பூரில் வசிக்கும் தனது குடும்ப உறுப்பினரைக் காண, இந்தியாவிலிருந்து வந்தார்.
பாதிக்கப்பட்ட அனைவரும் சிங்கப்பூருக்கு வந்ததிலிருந்து, வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வந்ததாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.