இந்தியா, துருக்கி, மியன்மார் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்த 21 பேருக்கு நோய்த்தொற்று - விவரங்கள்
இந்தியா, துருக்கி, மியன்மார் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்த 21 பேருக்கு நோய்த்தொற்று - விவரங்கள்
சிங்கப்பூரில் நேற்று கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 21 பேரும், வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.
அவர்களின் விவரங்கள்....
சிங்கப்பூரர்கள் - 3
சிங்கப்பூர் நிரந்தரவாசி - 3
அவர்கள் இந்தியா, மியன்மார், பிலிப்பீன்ஸ், துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து சிங்கப்பூர் திரும்பியவர்கள்.
குறுகியக் கால விசா அட்டையில் வந்தவர்கள் - 3
ஒருவர் காவல்துறை விசாரணைக்காக மலேசியாவிலிருந்து வந்தவர்.
குடும்பத்தினரைச் சந்திக்க
ஒருவர் கனடாவிலிருந்தும் மற்றொருவர் இந்தியாவிலிருந்தும் இங்கு வந்தார்.
வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் - 11
அவர்கள் பங்களாதேஷ், மியன்மார், பிலிப்பீன்ஸ் ஆகியவற்றிலிருந்து சிங்கப்பூர் வந்தவர்கள்.
அவர்களில் இருவர் இல்லப் பணிப்பெண்கள்.
சார்ந்திருக்கும் அனுமதி அட்டை வைத்திருப்பவர் - 1
அவர் இந்தியாவிலிருந்து வந்தவர்.
21 பேரும், வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றிக் கொண்டிருந்த வேளையில் பரிசோதிக்கப்பட்டனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.