அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு கிருமித்தொற்று உறுதி
சிங்கப்பூரில் நேற்று மேலும் 30 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் நேற்று மேலும் 30 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சமூக அளவில் ஒருவர் பாதிக்கப்பட்டார்.
அவர்களையும் சேர்த்து சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மொத்தம் 59,059.
வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் எவருக்கும் நோய்த்தொற்று அடையாளம் காணப்படவில்லை.
சமூக அளவில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர் சிங்கப்பூர்ப் பெண்மணி.
57 வயதான அவருக்கு நோய்த்தொற்று அறிகுறி ஏதும் தென்படவில்லை.
வியட்நாம் செல்வதற்காக, இம்மாதம் 13 ஆம் தேதி பரிசோதனை செய்தபோது அவருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
அவருடைய குடும்ப உறுப்பினர்களும், அவரோடு நெருங்கிப் பழகியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் எஞ்சிய 29 பேர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள்.
அவர்களில் அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா ஆகிய நாடுகளிலிருந்த திரும்பிய சிங்கப்பூர்களும், நிரந்தரவாசிகளும் 6 பேர்.
இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஆகியவற்றிலிருந்து வேலை அனுமதி அட்டையின் கீழ் வந்தவர்கள் ஐவர்.
நீண்ட அல்லது குறுகிய கால அனுமதியின் கீழ் இந்தியாவிலிருந்தும், மியன்மாரிலிருந்தும் வந்தவர்கள் மேலும் நால்வர்.
சிறப்பு அனுமதியின் கீழ், ஐக்கிய அரபுச் சிற்றரசிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த கப்பலில் வந்த சிப்பந்தி ஒருவர்.
மேலும் 13 பேர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள். அவர்களில் ஐவர் இல்லப் பணிப்பெண்கள். பங்களாதேஷ், இந்தியா, மியன்மார் ஆகிய நாடுகளிலிருந்து அவர்கள் சிங்கப்பூர் வந்தனர்.
அவர்கள் இங்கு வந்ததிலிருந்தே வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருகின்றனர். அல்லது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.