சிங்கப்பூரில் அனைத்துலக நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு
உலக அளவில் பொருளாதாரம் இறக்கம் கண்டிருந்தாலும் சிங்கப்பூரில் அனைத்துலக நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றன.
உலக அளவில் பொருளாதாரம் இறக்கம் கண்டிருந்தாலும் சிங்கப்பூரில் அனைத்துலக நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றன.
கடந்த சில ஆண்டுகளாக உருவாகியுள்ள வர்த்தகப் பூசல்கள், நிச்சயமற்ற சூழல்கள் போன்றவை சிங்கப்பூருக்கு வரும் முதலீடுகளைக் குறைக்கவில்லை.
இந்த ஆண்டின் முதல் பாதியில் 8.1 பில்லியன் வெள்ளி சிங்கப்பூரில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகப் பொருளியல் வளர்ச்சிக் கழகம் தெரிவித்தது.
உற்பத்தித் துறை மட்டும் 4.6 பில்லியன் வெள்ளியை ஈர்த்துள்ளது. சேவைத்துறை 3.5 பில்லியன் வெள்ளியை ஈர்த்துள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 5.3 பில்லியன் வெள்ளி சிங்கப்பூரில் முதலீடு செய்யப்பட்டிருந்தது.
அனைத்துலக நிறுவனங்கள் முதலீடு செய்ய அமெரிக்கா, ஐரோப்பா, சிங்கப்பூர் ஆகியவற்றை அதிகமாகத் தெரிவுசெய்கின்றன.