சமூக அளவில் பாதிக்கப்பட்ட இருவர், குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணைய அதிகாரியுடன் தொடர்புடையவர்கள்
சமூக அளவில் பாதிக்கப்பட்ட 10 பேரில் இருவர், குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணைய அதிகாரியுடன் தொடர்புடையவர்கள்.
சமூக அளவில் பாதிக்கப்பட்ட 10 பேரில் இருவர்,
குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணைய அதிகாரியுடன் தொடர்புடையவர்கள்.
கடந்த மாதம் 25 ஆம் தேதி
அதிகாரியுடன் சாப்பிடச் சென்ற ஒருவரின் மனைவியும் மகனும் இம்முறை பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிலிப்பீன்ஸைச் சேர்ந்த 37 வயது மனைவியும், சிங்கப்பூரரான 3 வயது குழந்தையும், பாதிக்கப்பட்டவருடன் நெருங்கியத் தொடர்பில் இருந்ததால், கடந்த மாதம் 27 ஆம் தேதி தனிமைப்படுத்தப்பட்டனர்.
அவர்களுக்கு முதலில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கிருமித்தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இம்மாதம் முதல் தேதி மீண்டும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கிருமித்தொற்று உறுதியானது.
சமூக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, கடந்த வாரம் மட்டும் 60க்கு உயர்ந்துள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.