சிங்கப்பூரில் மேலும் 3,598 பேருக்குக் கிருமித்தொற்று - வெளிநாட்டு ஊழியர் விடுதியில் உள்ள 790 பேருக்குப் பாதிப்பு
சிங்கப்பூரில் மேலும் 3,598 பேருக்குக் கிருமித்தொற்று - வெளிநாட்டு ஊழியர் விடுதியில் உள்ள 790 பேருக்குப் பாதிப்பு
வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் நேற்றுப் புதிதாக 3,598 பேருக்கு COVID-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் (அக்டோபர் 22) பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,637. அது நேற்றுப் பதிவான சம்பவங்களை விட சற்று அதிகம்.
சுகாதார அமைச்சு அந்த விவரங்களை வெளியிட்டுள்ளது.
- உள்ளூர் அளவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் - 3,594 பேர்
- அவர்களில் சமூக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் -2,804 பேர்
- வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் வசிப்பவர்கள் -790 பேர்
- வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் - 4 பேர்
- சிங்கப்பூரில் இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோர் - 169,261 பேர்