சிங்கப்பூரில் முதன்முறையாகத் திறக்கப்பட்டுள்ள மனநலம் பேணும் நிலையம்
சிங்கப்பூரில் முதன்முறை மனநலம் பேணும் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் முதன்முறை மனநலம் பேணும் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
Mind Art Experiential Lab என்றழைக்கப்படும் அந்த நிலையம் அலெக்சாண்ட்ரா (Alexandra) மருத்துவமனையில் அமைந்துள்ளது.
மூத்தோர் தங்கள் நினைவாற்றலை வலுப்படுத்துவது அதன் நோக்கங்களில் ஒன்றாகும்.
பராமரிப்பாளர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு உதவத் தேவையான திறன்களைப் பெறவும் நிலையம் வகை செய்யும்.
மெதுவாக நடப்பது, உடலையும், மனத்தையும் ஒருங்கிணைப்பது போன்றவற்றில் மூத்தோருக்கு உதவ இணைய நிகழ்ச்சிகளும் உள்ளன.
முதுமை மறதி நோயை முன்கூட்டியே தவிர்க்க அத்தகைய நிகழ்ச்சிகள் உதவும் என்று நிலையம் நம்புகிறது.