Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

இந்தியா, இந்தோனேசியா, பிரான்ஸிலிருந்து சிங்கப்பூர் வந்த 5 பேருக்கு நோய்த்தொற்று

இந்தியா, இந்தோனேசியா, பிரான்ஸிலிருந்து சிங்கப்பூர் வந்த 5 பேருக்கு நோய்த்தொற்று

வாசிப்புநேரம் -
இந்தியா, இந்தோனேசியா, பிரான்ஸிலிருந்து சிங்கப்பூர் வந்த 5 பேருக்கு நோய்த்தொற்று

கோப்புப் படம்: Jeremy Long

சிங்கப்பூரில் நேற்றுப் புதிதாக ஐவருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

அவர்களில் ஒருவர் இந்தியாவிலிருந்து தாயகம் திரும்பிய சிங்கப்பூரர்.

மூவர் இந்தோனேசியாவிலிருந்து வந்தவர்கள்; அவர்கள் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள்.

எஞ்சியவர் பிரான்ஸிலிருந்து குறுகிய கால அனுமதியில் இங்கு வேலை செய்ய வந்தவர்.

ஐவரும் சிங்கப்பூருக்கு வந்ததிலிருந்து வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அவர்களையும் சேர்த்து இங்கு கிருமித்தொற்று உறுதியானோர் மொத்த எண்ணிக்கை 58,165ஆனது.

கடந்த 13 நாளாக, சமூக அளவிலோ, வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியிலோ யாரும் பாதிக்கப்படவில்லை. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்