COVID-19: சிங்கப்பூரில் இன்று புதிதாக 246 பேருக்கு நோய்த்தொற்று - சமூக அளவில் 6 பேருக்குப் பாதிப்பு
சிங்கப்பூரில் இன்று புதிதாக 246 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இன்று புதிதாக 246 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர்களையும் சேர்த்து, இங்குப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 43,907 ஆனது.
புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் தங்குமிடங்களில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.
சமூக அளவில், 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் மூவர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தவாசிகள்;
மேலும் மூவர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது.